Monday, January 2, 2017

ஊழல் தடுப்புச் சட்டம்,1988 ( The Prevention of Corruption Act, 1988)




ஊழல் தடுப்புச் சட்டம்,1988
The Prevention of Corruption Act, 1988


அரசு பணியாளர் [பிரிவு.2(c)]
public servant

அரசு பணியாளர் என்பவர் 

    i.     அரசாங்கத்தின் பணியில் இருக்கும் அல்லது அதனிடம் சம்பளம் பெறும் அல்லது பொதுக்கடமை எதனையும் புரிவதற்காக அரசாங்கத்தால் கட்டணங்களாகவோ, தரகராகவோ பணியூதியம் வழங்கப்படும் நபர் எவரும்

   ii.     உள்ளாட்சி அமைப்பின் பணியில் இருக்கும் அல்லது அதனிடம் சம்பளம் பெறும் எவரும் 

   iii.     மத்திய,மாகாண, மாநில சட்டத்தாலோ,அதன் வழியாலோ, நிறுவப்பட்ட கூட்டுருமத்தின் அல்லது அரசு நிறுவனத்தில் அல்லது அரசு நிதியுதவி பெறும் அமைப்பில் சம்பளம் பெறும் நபர் 

   iv.     நீதிமுறை அலுவல் காரணமாக சட்டத்தால் அதிகாரமளிக்கப்பட்ட நபர் 

   v.     நீதி நிர்வாகம் தொடர்பாக கலைப்பதிகாரி, சொத்துப் பேணுநர் அல்லது ஆணையர்    நபர் எவரும்

   vi.     நீதிமன்றத்தால் அல்லது பொது அதிகார அமைப்பால் முடிவு செய்வதற்காக, அறிக்கை செய்வதற்காக குறித்தனுப்பப்பட்டவர்

  vii.     தேர்தல் பணிக்காக அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்

  viii.     பொதுக்கடமைக்காக அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்

   ix.     மத்திய, மாநில, மாநில சட்டத்தாலோ,அதன் வழியாலோ, நிறுவப்பட்ட கூட்டுருமத்தின் அல்லது அரசு நிறுவனத்தில் அல்லது அரசு நிதியுதவி பெற்று அவற்றில் ஈடுபட்டுள்ள ஒரு பதிவு பெற்ற கூட்டுறவு சங்க தலைவராக, செயலாளராக இருக்கும் நபர்

   x.     பணியாளர் தேர்வாணையம், வாரியம், வாரியத்தின் சார்பு தேர்வு நடத்தும் தெரிவுக்குழுவில் உறுப்பினர் எவரும்

   xi.     பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் எவரும்

  xii.     மத்திய, மாகாண, மாநில சட்டத்தாலோ, அதன் வழியாலோ, நிறுவப்பட்ட அரசு நிதியுதவி பெறும் அமைப்பில் சம்பளம் பெறும் நபர் ஆவார்.

அரசுப் பணியாளர் எப்பொழுது ஊழல் குற்றம் செய்ததாக கருதப்படுவார் [பிரிவு13]
Criminal misconduct by a public servant

அ) அரசுப் பணியாளர் அ) தமக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ பணி சட்டப்படியான பணிஊதியம் அல்லாத கைக்கூலி எதிலாகிலும் தூண்டுகோலாகவோ வெகுமதியாகவோ எவரிடமிருந்தும் வாடிக்கையாக ஏற்பாராயின் அல்லது கேட்டுப்பெறுவாராயின், ஏற்க உடன்படுவாராயின் அல்லது கேட்டு பெறுவதற்கு முயல்வாராயின்

ஆ) தம்மால் செய்யப்பட்டிருக்கிற அல்லது செய்யப்படவிருக்கிற நடவடிக்கை அல்லது எதனோடும் தொடர்பு கொண்டிருக்கிற அல்லது தொடர்புடையவராக அநேகமாகத தொடர்பு கொண்டிருந்திருக்கக் கூடுமென்று தாம் அறிந்துள்ள அல்லது தம்முடைய அல்லது தாம் எவர் கீழ் பணிபுரிகிறாரோ அந்த அரசுப் பணியாளருடைய அலுவல்முறைப் பதவிப் பணிகளுடன் தொடர்பு எதுவுமுடைய எவரிமிருந்துதேனும் தமக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ மறு பயனுக்காகவோ விலையுயர்ந்த பொருள் எதையேனும் வழக்கமாக தாம் ஏற்பாராயின் அல்லது கேட்டுப் பெறுவாராயின் அல்லது ஏற்க உடன்படுவாராயின் அல்லது கேட்டுப்பெற முயல்வாராயின்

இ) அரசுப் பணியாளர் என்ற முறையில் தம்மிடம் அல்லது தம் கட்டாளுகையின் கீழ் ஒப்படைக்கப்பட்ட சொத்து எதனையும் நேர்மையற்ற முறையிலோ அல்லது மோசடியாகவோ தாம் கையாடல் செய்வாராயின் அல்லது பிறவாறு தமது சொந்த பயனுக்காக மாற்றிக் கொள்வாராயின் அல்லது பிறர் எவரையும் அவ்வாறு செய்ய அனுமதிப்பாராயின் அல்லது

ஈ)     I.      ஊழலான அல்லது சட்டமுரணான வழிகளின் மூலமாகத் தமக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ விலையுயர்ந்த பொருள் அல்லது பணமதிப்புள்ள பயன் எதனையும் பெறுவாராயின் அல்லது

   II.     அரசுப் பணியாளார் என்ற தமது பதவி நிலையைத் தவறாகப் பயன்பபடுத்துவதன் மூலமாகத் தமக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ விலையுயர்ந்த பொருள் அல்லது பணமதிப்புள்ள பயன் எதனையும் பெறுவாராயின், அல்லது

   III.     அரசுப் பணியாளராக பதவி வகிக்கும் போது பொது நலன் ஏதுமின்றி எவருக்காகவும் விலையுயர்ந்த பொருள் அல்லது பணமதிப்புள்ள பயன் எதனையும் கேட்டுப் பெறுவாராயின், அல்லது  அவரோ, அவர் சார்பில் வரும் எவருமோ, அவருடைய வருமானத்தின் தெரிநிலையான வழிவகைகளுக்குப் பொருந்தாத விகிதத்தில் பணம் தொடர்பான வழிவகைகளையோ அல்லது சொத்தையோ உடைமையில் கொண்டிருந்த அல்லது பதவி காலத்தில் கொண்டிருந்து, அதற்கு தெளிவுறக் கணக்கு காட்ட முடியவில்லையாயின் குற்றச் செயலை செய்ததாக சொல்லப்படுவார்.

அரசு பணியாளர் கைகூலி பெறுதல் [பிரிவு.7]

அரசு பணியாளர் எவரிடமும்  அத்தகைய அரசுப் பணியாளர் என்ற முறையில் அலுவல்முறைச் செயல் எதனையும் செய்ய அல்லது செய்யாமல் விட அல்லது எவருக்கேனும் சலுகையோ, சலுகையின்மையோ காட்ட அல்லது காட்டாமல் விட அல்லது நன்மை அல்லது தீமை செய்வதற்கு அல்லது செய்ய முயல்வதற்கு வெகுமதியாக தமக்காகவோ, வேறு எவருக்கோ கைக்கூலி எதையாகிலும் ஏற்பாராயின் அல்லது கெட்டுப்பெற முயல்வாராயின் அவர் ஆறுமாதங்களுக்கு குறையாத ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும் சிறைதண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படத்தக்கவர் ஆவார்.

விளக்கங்கள்

அ)அரசு பதவியை வகிக்க போவதாக நம்பச் செய்து ஏமாற்றி கைகூலி பெற்றால் இப்பிரிவில் வரையரை செய்யப்பட்டுள்ள குற்றத்தை செய்தவராகார்.

ஆ)கைக்கூலி என்பது பணத்தால் மதிப்பிடத்தக்க கைகூலியை மட்டுமே குறிப்பதன்று.

இ)சட்டப்படியான பணியூதியம் என்பது அரசால் அல்லது நிறுவனத்தால் அனுமதிக்கப்படுகின்ற பணியூதியங்கள் அனைத்தும் அடங்கும்

ஈ)’செய்வதற்கு தூண்டுகோல் அல்லது வெகுமதி” என்பது கைகூலியை பெற்றுக்கொள்கிறவரை குறிக்கும்

உ)அரசாங்கத்துடன் தனக்குள்ள செல்வாக்கு, அந்த நபரை நம்பி கைகூலி கொடுப்பதற்கு தூண்டுவதால் அவர் குற்றம் செய்தவராகிறார்.

அரசு பணியாளர் ஊழல் அல்லது சட்டவிரோதமான வழிகளில் கைகூலி பெறுதல் [பிரிவு.8]

அரசுப் பணியாளர் எவரும் பிரிவு.7-இல் குறிப்பிடப்பட்டுள்ள செயலை செய்ய வெகுமதியாக தமக்காகவோ, வேறு எவருக்கோ ஊழல் அல்லது சட்டவிரோதமாக கைக்கூலி எதையாகிலும் ஏற்பாராயின் அல்லது கேட்டுப்பெற முயல்வாராயின் அவர் ஆறுமாதங்களுக்கு குறையாத ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும் சிறைதண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படத்தக்கவர் ஆவார்.

அரசு பணியாளர் சொந்த செல்வாக்கை செலுத்த கைகூலி பெறுதல்[பிரிவு.9]
Taking gratification, for exercise of personal influence with public servant

அரசுப் பணியாளர் எவரும் பிரிவு.7-இல் குறிப்பிடப்பட்டுள்ள செயலை செய்ய வெகுமதியாக தமக்காகவோ, வேறு எவருக்கோ தன் சொந்த செல்வாக்கை செலுத்த வெகுமதியாக தமக்காகவோ, வேறு எவருக்கோ கைக்கூலி எதையாகிலும் ஏற்பாராயின் அல்லது கேட்டுப்பெற முயல்வாராயின் அவர் ஆறு மாதங்களுக்கு குறையாத ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும் சிறைதண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படத்தக்கவர் ஆவார்.

ஊழல் குற்றச் செயலுக்கு அரசு பணியாளர் உடந்தையாயிருப்பதற்கு தண்டணை [பிரிவு.10]

அரசு பணியாளராய் இருந்து ஊழல் அல்லது சட்டவிரோதமான வழிகளில் கைகூலி பெறவும், சொந்த செல்வாகை செலுத்த கைகூலி பெறவும் உடந்தையாயிருப்பவருக்கு அவர் ஆறு மாதங்களுக்கு குறையாத ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும் சிறைதண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படத்தக்கவர் ஆவார்.

விலைமதிப்புள்ள பொருளை பெறுதல் [பிரிவு.11]

அரசுப் பணியாளர் எவரும் பிரிவு.7-இல் குறிப்பிடப்பட்டுள்ள செயலை செய்ய வெகுமதியாக தமக்காகவோ, வேறு எவருக்கோ தன் சொந்த செல்வாக்கை செலுத்த வெகுமதியாக தமக்காகவோ, வேறு எவருக்கோ விலை உயர்ந்த பொருள் எதையாகிலும் ஏற்பாராயின் அல்லது கேட்டுப்பெற முயல்வாராயின் அவர் ஆறு மாதங்களுக்கு குறையாத ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும் சிறைதண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படத்தக்கவர் ஆவார்.

பிரிவு.7-இல் அல்லது 11-இல் வரையரை செய்யப்பட்ட குற்ற செயல்களுக்கு உடந்தையாயிருத்தல் [பிரிவு.12]

பிரிவு.7இல் அல்லது 11-இல் வரையரை செய்யப்பட்ட குற்ற செயல்களுக்கு உடந்தையாயிருப்பவருக்கு அவர் ஆறு மாதங்களுக்கு குறையாத ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும் சிறைதண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படத்தக்கவர் ஆவார்.

குற்றச் செயலை செய்வதை வழக்கமாகக் கொண்டித்தல்[பிரிவு.14(ஆ)

பிரிவு 8,9,12 இன் படி குற்றச் செயலை செய்வதை வழக்கமாகக் செய்கிற எவரும் 2 ஆண்டுக்கு குறையாத 7 ஆண்டுகள் வர நீடிக்கலாகும் சிறைதண்டணையும் அபராதத்திற்கும் உள்ளாக்கப்படுவார்.

அபராதம் நிர்ணயப்பதற்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவை[பிரிவு.16]

அபராதம் நிர்ணயப்பதற்கு முன் குற்றஞ்சாட்டப்பட்டவர் அக்குற்றச் செயலை இழைத்ததன் மூலம் பெற்றிருக்கும் சொத்தின் மதிப்பினையும், கணக்கு காட்ட இயலாமலிருக்கும் சொத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்

குற்ற முயற்சிக்குத் தண்டணை[பிரிவு.15]

ஊழல் குற்றச் செயலை இழைக்க முயல்கிற எவரொவரும், மூன்றாண்டுகள் வரை நீட்டிக்கலாகும் சிறை தண்டணையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படுவார்.

CP சரவணன்,வழக்கறிஞர்

CENTRAL VIGILANCE COMMISSION
 Satarkata Bhavan , A-Block
GPO Complex , INA
New Delhi - 110 023

THE DIRECTORATE OF VIGILANCE AND ANTI-CORRUPTION
NCB 21 TO 28, P.S.KUMARASAMY RAJA SALAI (GREENWAYS ROAD),
RAJA ANNAMALAIPURAM,
CHENNAI – 600 028.

Telephone : 91-44-24615929 / 24615949 / 24615989 / 24954142 / 9445048999 / 9445048990

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005( Right to Information Act,2005)


மக்களாட்சியில் அரசு மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்வதற்கும், ஒளிவு மறைவற்ற நிலை மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்துவதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டது தகவல் உரிமைச் சட்டம்,2005 ஆகும்.

பெறக் கூடிய தகவல்கள் [பிரிவு 2(f)] Information

தகவல் என்பது பதிவுருக்கள், ஆவணங்கள், குறிப்பாணைகள், மின்னஞ்சல்கள், கருத்துரைகள், அறிவுறைகள், செய்தி வெளியீடுகள், சுற்றறிக்கைகள், ஆணைகள், பயணக்குறிப்புகள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், தாள்கள், மாதிரிகள், மாதிரிப்படிவங்கள், மின்னணு வடிவம் எதிலும் வைத்திருக்கப்பட்ட தகவல் விபரங்கள் மற்றும் அப்போதைக்கு செயலாற்றலில் உள்ள வேறு சட்டம் எதன்படியும் பொது அதிகார அமைப்பின் மூலம் பெறக்கூடிய தனியார் குழுமம் எதன் தொடர்பான தகவலை உள்ளிட்ட வடிவம் எதிலும் உள்ளவைகள் அனைத்தும் தகவல் ஆகும். இவற்றை தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறமுடியும்

பெறமுடியாத தகவல்கள் (பிரிவு.8) Exemption from disclosure of information

(1)  இந்த சட்டத்தில் அடங்கிய எது எவ்வாறிருப்பினும் 
a)   இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு, இந்தியாவின் படைத்திறன் சார்ந்த விஞ்ஞான அல்லது பொருளாதார நலன்கள், அயல்நாட்டு உறவை பாதிக்கும் அல்லது குற்றமொன்றை தூண்டுவதாக அமையும் தகவல்கள் 

b)   நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் எதனாலும் வெளிப்படையாக தடை செய்யப்பட்ட அல்லது நீதிமன்ற அவமதிப்பை ஏற்படுத்துகின்ற தகவல்கள்

c)   நாடாளுமன்ற அல்லது மாநில சட்டமன்ற சிறப்புரிமையினை மீறும் தகவல்கள்

d)   பொதுமக்களின் பேரளவு நலனுக்கு அவசியமானதன்றி, வணிகத்தின் நம்பகத்தன்மை, வியாபார இரகசியங்கள் அல்லது அறிவுசார் சொத்துடைமை உள்ளிட்டால், மூன்றாம் நபர் சந்தையில் போட்டியிடும் நிலைக்கு தீங்காகும் தகவல்கள்

e)   அறப்பொறுப்பினர் உறவில் கிடைக்கும் தகவல்கள்

f)    வெளிநாட்டு அரசிடம் ரகசியமாய் பெற்ற தகவல்கள்

g)   நபர் ஒருவரின் வாழ்க்கைக்கு அல்லது உடற்பாதுகாப்பிற்கு அல்லது தகவலின் மூலத்தை அடையாளம் காண்பதற்கு சட்ட நிறைவேற்றம் அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக ரகசியமாய் கொடுக்கப்பட்ட உதவிக்கு அபாயம் விளைவிக்கக் கூடிய தகவல்கள்

h)   புலனாய்வு செயல்முறைக்கு அல்லது குற்றவாளிகளை கைது செய்தலுக்கு அல்லது குற்ற வழக்கு தொடருவதற்கு தடை செய்யும் தகவல்கள்
i)    அமைச்சர்கள் குழு, செயலாளர்கள் மற்றும் பிற அலுவலர்களின் பதிவுருக்கள் மற்றும் அமைச்சரவை ஏடுகள்.

j)    மேலும் அமைச்சரவை குழுவின் முடிவுகள், அவற்றிகான காரணங்களை விஷயம் நிறைவடைந்த பின்னர் பகிரங்கப்படுத்துதல் வேண்டும். பொது செயல்பாடு அல்லது நலனுக்கு உறவுடயாதாக இன்றியும், தனிநபரின் அந்தரங்கத்தில் நியாயமற்ற தலையீடு
.
(2) அலுவல்சார் ரகசியங்கள் சட்டம்,1923 [Official Secrets Act,1923] இன் படி விளக்களிக்கப் பட்ட தகவல்களை பொதுநலனுக்காக பெறலாம்.

(3) ஆனாலும் பிரிவு 8(1)(a,c,i) போன்ற தகவல்கள் விண்ணப்ப தேதிக்கு 20 ஆண்டுகள் முன்னர் நிகழ்ந்த, நடந்த, ஏற்பட்ட தகவல்களை அளிக்கலாம்.

நபர் ஒருவரிடம் நிலை பெற்றிருக்கும் பதிப்புரிமையின்(Copy Right) மீறுகையாயிருப்பின் தகவல் நிராகரிக்கப்படலாம். (பிரிவு.9)

மூன்றாம் தரப்பினர் தகவல் [பிரிவு.11] [Third party Information]

1.   மூன்றாம் தரப்பினர் தொடர்புடைய அல்லது அவரால் அளிக்கப்பட்டிருப்பதாக மற்றும் அவரால் இரகசியமாக கருதப்பட்டு வருவதாக உள்ளதோ அத்தகவலை அளிக்கும் வேளையில் விண்ணப்பம் பெறப்பட்ட 5 நாட்களுக்குள் மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலர் மூன்றாம் தரப்பினரை முறையீடு செய்வதற்கு அழைப்பு விடுத்து, தகவல் அளிக்கும் முன் மூன்றாம் தரப்பினரின் முறையீட்டை கருத்தில் கொள்ள வேண்டும்
மூன்றாம் தரப்பினரின் வியாபார அல்லது வணிக இரகசியங்கள் தவிர பொதுநலன் கருத்தில் கொண்டு வெளிப்படுத்தலாம்.

2.   மூன்றாம் தரப்பினரின் தகவல் அறிவிப்பு பெற்ற தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள் முறையீடு செய்ய மூன்றாம் தரப்பினருக்கு வாய்ப்பளிக்கப்படும்

3.   மூன்றாம் தரப்பினர் தொடர்பான தகவலை கொடுக்கலாமா, வேண்டாமா என்ற முடிவினை விண்ணப்பம் பெற்ற 40 நாட்களுக்குள் முடிவினை கொடுக்க வேண்டும்

4.   முறையீட்டின் மேல் எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து மூன்றாம் தரப்பினர் மேல்முறையீடு செய்ய உரிமை கொண்டவர் என்ற அறிக்கை அடங்கியிருக்க வேண்டும்.

தகவல் பெறுவது எப்படி [பிரிவு.6] [Request for obtaining information.]

1)தகவல் உரிமைச் சட்டத்தின் படி தகவல் பெற விழையும் நபர், ஆங்கிலம் அல்லது அப்பகுதியின் அலுவல் மொழியில் எழுத்து வடிவில் அல்லது மின்னனு வழியில் கேட்கலாம்.
தகவல் தேவைப்படும் தொடர்புடைய அமைப்பின் மத்திய அல்லது மாநில தகவல் அலுவலருக்கு கோரப்படும் தகவலின் விபரங்களை குறிப்பிட்டு வேண்டுகோள் ஒன்றை செய்ய வேண்டும்

2)தகவலுக்காக வேண்டுகோள் செய்யும்பொழுது விண்ணப்பதாரர் தகவல் காரணத்தையோ அல்லது விண்ணப்பதாரரை தொடர்பு கொள்ள அவசியமான விபரங்களைத் தவிர சொந்த விபரங்கள் எதையும் கேட்கக் கூடாது.

3) ஒரு தகவலுக்காக பொது அதிகார அமைப்பிடம் வேண்டுகோள் செய்யும் பொழுது

(i) அத்தகவல் வேறொரு அலுவலகம் வைத்திருப்பதாக அல்லது

(ii) அதன் கருப்பொருள் வேறொரு அலுவலக பணிகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்குமிடத்து, அந்த விண்ணப்பத்தை அல்லது அதன் பகுதியை சம்மந்தப்பட்ட அலுவகத்திற்கு மாற்றி அனுப்புதல் வேண்டும் மற்றும் அத்தகைய மாற்றல் குறித்து விண்ணப்பதாரருக்கு தெரிவித்தல் வேண்டும்.
மாற்றல் நடைமுறையானது விண்ணப்பம் பெறப்பட்ட 5 நாட்களுக்கு அதிகமாக ஆகக் கூடாது.

வேண்டுகோளை முடிவு செய்தல் [பிரிவு.7][Disposal of Request]

(1) மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலர் விரைந்து, விண்ணப்பம் கிடைக்கப் பெற்ற 30 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் அல்லது பிரிவு. 8 மற்றும்  9-இல் குறித்துறைக்கப்பட்ட காரணங்களின் அடிப்படையில் இருப்பின், அச்சாரம்சங்களை  நிராகரிக்க வேண்டும்.

(2 )மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலர் 30 நாட்களுக்குள் தகவல் தர தவறினால், மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலர் நிராகரித்துவிட்டதாக கருதப்படுதல் வேண்டும்.

(3) அந்த தகவலை அளிப்பதற்கான செலவுத் தொகையுடன், கூடுதல் கட்டணம் அளிக்க வேண்டிய நிலையில், மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலர் செய்தி அறிவிப்பு அனுப்பி அதில் பின்வருவனவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்
(அ) அந்த தகவலை அளிப்பதற்கான செலவுத் தொகையை குறிப்பிட்டு, நிர்ணயம் செய்யப்பட்ட கூடுதல் கட்டணத்தின் விவரங்களை கணக்கீடுகளுடன் அனுப்பிய செய்தி அறிப்பு அனுப்பபட்டதற்கும், கட்டணம் செய்வதற்கும் ஆன கால அளவை குறிப்பிட்ட 30 நாட்களிலிருந்து விலக்கப்படுதல் வேண்டும்.
(ஆ) விண்ணப்பத்தின் முடிவுடன், மேல்முறையீட்டு செயல்முறை, மேல்முறையீட்டு அலுவலரின் முகவரி, காலவரை, வேறு ஏதாவது வடிவமுறைகள், கட்டணத்தொகை மற்றும் தகவல் பெற அணுகும் முறை போன்ற தகவல்களை குறிப்பிட வேண்டும்

(4) விண்ணப்பதாரர் புலன் ஊனமுற்றவராக இருக்கும்பட்சத்தில் மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலர் தகவலைப்பெற உதவிகள், பார்வையிட தேவையான உதவிகளை அளித்திட வேண்டும்.

(5) மின்னணு வடிவத்தில் தகவலை பெற வேண்டியிருக்கும் பட்சத்தில், அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

(6) காலவரை தவறி அளிக்கும் தகவல்களுக்கு, அந்த தகவல் செலவு தொகையின்றி அளிக்கப்பட வேண்டும்

(7) மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலர் தகவல் அளிக்கும் பொழுது, மூன்றாம் தரப்பினரின் முறையீட்டை கருத்தில் கொள்ள வேண்டும்.

(8) தகவல்கள் நிராகரிக்கும் வேளையில் மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலர் விண்ணப்பதாரருக்கு நிராகரிப்பிற்கான காரணங்கள் 
    I.     நிராகரிப்பினை எதிர்த்து மேல்முறையீட்டு கால அளவு
    II.     மேல்முறையீட்டு அலுவலரின் முகவரி 
   III.     வினாக்கள் தகவல் பதிவுருக்களின் பாதுகாப்பிற்கு அல்லது பேணுகைக்கு தீங்காக இருந்தாலன்றி, தகவல் சாதாரணமாக இருக்க வேண்டும்.

மேல்முறையீடு பிரிவு.19

1.   மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலர் தகவல் முடிவினால் குறையுற்ற அல்லது திருப்தியில்லாத நபர், அத்தகைய கால அளவு முடிவுற்ற அல்லது முடிவை பெற்றதிலிருந்து 30 நாட்களுக்குள் மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலரின் பதவியில் முதுநிலையில் உள்ளவரிடம் முதல் மேல்முறையீடு செய்யலாம்.
போதுமான காரணத்தால் மேல்முறையீடு செய்யமுடியாமல் இருந்தார் என மேல்முறையீடு அலுவலர் உளநிறைவடைந்தால் 30 நாட்கள் முடிவடைந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ளலாம்.

2.   மூன்றாம் தரப்பினரால் முறையீடு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில், மேற்படி ஆணையின் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து கொள்ள வேண்டும்.

3.   இரண்டாம் மேல்முறையீடானது அந்த முடிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் மத்திய அல்லது மாநில தகவல் ஆணையத்திடம் செய்து கொள்ளலாம். போதுமான காரணத்தால் மேல்முறையீடு செய்யமுடியாமல் இருந்தார் என மத்திய அல்லது மாநில தகவல் ஆணையம் உளநிறைவடைந்தால் 90 நாட்கள் முடிவடைந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ளலாம்.

4.   மூன்றாம் தரப்பினரால் முறையீடு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில், மத்திய அல்லது மாநில தகவல் ஆணையம் மூன்றாம் தரப்பினர் முறையீடு கேட்கப்படுவதற்கு வாய்ப்பு அளித்தல் வேண்டும்.

5.   மேல்முறையீட்டு நடவடிக்கைகளில், வேண்டுகோளின் நிராகரிப்பு நியாயமானதே என நிரூபிக்கும் சுமை, வேண்டுகோளை மறுத்த மத்திய அல்லது மாநில தகவல் அலுவலரையே சார்ந்து இருக்கும்

6.   முதல் மற்றும் இரண்டாம் மேல்முறையீடு பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அல்லது அதை தாக்கல் செய்ததிலிருந்து 45 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்

7.   மத்திய அல்லது மாநில தகவல் ஆணையத்தின் முடிவானது கட்டுப்படுத்தக் கூடியதாகும்.


தகவல் ஆணையத்தின் அதிகாரங்கள்

மத்திய அல்லது மாநில தகவல் ஆணையம்

a) சட்டத்தின் வகைமுறைகளை உறுதி செய்வதற்கு, குறிப்பிட்ட வடிவத்தில் தகவலை பெறவும், மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலரை நியமிக்கவோ, சில தகவலை பதிப்பித்து வெளியிடவோ, பதிவுருக்கள் பராமரித்தலில் அவசியமான மாற்றங்களை செய்தல், அலுவலர்களை பயிற்சிக்கு வகை செய்தல், ஆண்டறிக்கை அளித்தல்

புகார்தாரருக்கு இழப்பீடு அளிக்க வேண்டுறுத்தவும், தண்டங்கள் விதிக்கவும், விண்ணப்பத்தை நிராகரிக்கவும் அதிகாரம் கொண்டுள்ளது.

அபராதம்

மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலர் தீய எண்ணத்துடன் மறுத்திருப்பதாக அல்லது தவறான அல்லது முழுமையுறாத தகவலை கொடுத்திருப்பதாக அல்லது தகவல் அளிப்பதை தடுத்திருப்பதாக கருதப்படுமிடத்தில், விண்ணப்பம் பெறப்படுகிற அல்லது தகவல் அளிக்கும் வரை நாளொன்றுக்கு ரூ.250/- வீதம் அதிகப்படியாக ரூ.25,000/- வரை விதிக்கலாம்.

மேலும் மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலருக்கு அவருக்குப் பொருந்தும் பணி விதிகளின் படி ஒழுங்கு நடவடிக்கைக்காக பரிந்துரையும் செய்ய வேண்டும்.

நீதிமன்ற அதிகாரவரம்பிற்கு தடை [பிரிவு.23]

இச்சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஆணை குறித்து நீதிமன்றம் உரிமை வழக்கு, விண்ணப்பம் அல்லது பிற நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளலாகாது. இச்சட்டத்தின் மேல்முறையீடு தவிர வேறுவகையில் வாதிட கூடாது.

கட்டணங்கள்
தகவல் உரிமை[கட்டணம் மற்றும் செலவுகள்] விதிகள்,2005 இன் படி ரூபாய்.10/- ஆகும். உரிய ரசீது பெற்று பணமாகவோ அல்லது கணக்கு அலுவரின் பெயரில் எடுக்கப்பட்ட வரைவோலை அல்லது வங்கி காசோலை [பிரிவு.3]. மேலும் இந்தியன் தபால் ஆணை[IPO], விண்ணப்பத்துடன் இணத்து அனுப்பலாம்.

தமிழகத்தில் நீதிமன்ற கட்டணதலையாகவும் ஒட்டலாம் என அரசு ஆணை [G.O.(Ms).No.72 P&AR(AR.III) Dept / Dated 20-03-2007] உள்ளது.

A-4 அல்லது A-3 அளவுள்ள எடுக்கப்பட்ட அல்லது நகலுக்கு ரூ.2/-, பெரிய அளவுள்ள காகிததிற்கு அதன் அசல் கட்டணம். பதிவுருக்களை ஆய்வு செய்ய முதல் ஒரு மணி நேரத்திற்கு கட்டணம் ஏதுமில்லை அடுத்த ஒவ்வொடு மணி நேரத்திற்கும் ரூ.5/- [பிரிவு.4]
வட்டு அல்லது ஃப்ளாபியில்[Diskette or Floppy] தகவல் தர  ரூ.50/-

அச்சிட்ட தகவல்கள் அதில் குறிப்பிட்டுள்ள விலையும், ஜெரக்ஸ் ஒன்றிக்கு ரூ.2/- கட்டணமாகும் [பிரிவு.5]

வறுமை கோட்டிற்கு கீழே உள்ள நபர்களிடமிருந்து அத்தகைய கட்டணங்கள் ஏதும் வசூலிக்கக் கூடாது. [பிரிவு.7(5)].

Central Information Commission
Room No. 326, 2nd Floor
 August Kranti Bhawan,
Bhikaji Cama Place
 New Delhi-110066

Tamil Nadu Information Commission
No.2, Theagaraya Salai
 Near Aalai Amman Koil
 Teynampet

 Chennai - 600 018

இந்திய கல்விக் கொள்கை வரலாறு - மெக்காலே முதல் மோடி வரை! https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/24/history-of-i...