Tuesday, May 15, 2018

ஆய்வு அறிக்கை பற்றி காவல் நிலை ஆணை


காவல்துறையில் கைது செய்யக்கூடிய குற்றம் குறித்து, தக்க ஆதாரங்களுடன் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்காத காரணத்தினால், ஒருவர் குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 156(3)ன் கீழ் நீதிமன்றம் சென்று வழக்குத் தொடுக்கிறார். குற்றவியல் நீதிமன்ற நடுவர் அவர்கள், மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களை பார்வையிட்டு, அந்த மனு ஏற்றுக் கொள்ளத் தக்கதா? இல்லையா? என்பதை முடிவு செய்கிறார். ஏற்றுக் கொள்ளத் தக்கது இல்லை என்றால், உடனே நடுவர் அவர்கள் தள்ளுபடி செய்து விடுவார்.

மனு ஏற்று கொள்ளத் தக்கது என்றால்?
மனு ஏற்று கொள்ளத் தக்கது என்றால், விசாரணை செய்து அறிக்கை தருமாறு அந்தப் பகுதி காவல் நிலையத்திலுள்ள காவல் ஆய்வாளர் அவர்களுக்கு நடுவர் அவர்கள் உத்தரவு இடுவார்.  அந்த காவல்நிலையத்தில் இருந்து நீதிமன்ற பணிக்கு  வந்துள்ள காவலர் மூலம்நீங்கள் தாக்கல் செய்துள்ள அனைத்து ஆவணங்களும் அந்தக் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு  அனுப்பப்படும். சில நடுவர்கள் இத்தனை நாட்களுக்குள் அறிக்கை வேண்டும் என்று உத்தரவில் சொல்கிறார்கள். சிலர் அதனை குறிப்பிடுவதில்லை. அப்படி குறிப்பிடாத பட்சத்தில், விசாரணை அறிக்கைத் தாக்கல் செய்ய, மூன்று மாதங்கள் கூட ஆகிறது. ஆனால், இது போன்ற புலனாய்வுகள் ஒவ்வொன்றும் அனாவசியமான தாமதம் இல்லாமல் முடிக்கப்பட வேண்டும் என்று குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 173 கூறுகிறது

இறுதி அறிக்கையினை நடுவரிடம் தாக்கல் செய்யப்பட்ட பிறகுகூட அந்தக் குற்றத்தைப் பற்றி புலனாய்வு செய்ய தடை இல்லை என்று குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 173 (8)கூறுகிறது.  இந்த இறுதி அறிக்கைகள் குறித்து காவல் நிலை ஆணைகளில் கூறப்பட்டுள்ளதைப் பற்றிக் காண்போம்.
Tamilnadu Police Standing Orders

காவல் நிலை ஆணை எண்:658
இறுதி அறிக்கையானது படிவம் எண்:89ல் அதிகார வரம்புள்ள குற்றவியல் துறை நடுவர் அவர்களுக்கு, காவல் ஆய்வாளர் அவர்களால் அல்லது புலன் விசாரணை அதிகாரி அவர்களால்  குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 173 ன் கீழ் அனுப்பப்பட வேண்டிய அறிக்கையாகும்
படிவம் எண்:89 என்பது விசாரணை செய்கின்ற வழக்குகளை பொய்வழக்கு என்று கூறி அனுப்புவதற்கும், துப்பறிய முடியாத வழக்கு என்று கூறி அனுப்புவதற்கும் காவல்துறையினரால் பயன்படுத்தப்படுகின்ற படிவம் ஆகும்.

காவல் நிலை ஆணை எண்:659
விசாரணை செய்கின்ற வழக்குகளை, அவைகள் பொய்யாக இருந்தால் மட்டுமே, பொய் வழக்கு என்று அறிக்கை செய்ய வேண்டும். அந்த வழக்குகளை பொய்யென்று நம்புவதற்கு தகுந்த  ஆதாரங்கள்  விசாரணை அதிகாரிக்கு கிடைத்தால் ஒழிய, அந்த வழக்குகளை பொய் வழக்கு என்று சொல்லக்கூடாது. பொய்வழக்காக பெரும்பாலும் இருக்கலாம் என்று விசாரணை அதிகாரி எண்ணுவதை ஏற்க முடியாது. பொய் வழக்கு என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றாலோ, குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை என்றாலோ விசாரணை அதிகாரியானவர், அந்த வழக்கை துப்பு துலக்க முடியாத வழக்கு என்று திருப்பி அனுப்பிவிட வேண்டும்

காவல் நிலை ஆணை எண்:660
விசாரணை செய்கின்ற வழக்குகளில் எடுக்கின்ற முடிவை, படிவம் எண்:90ல் குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 157(ன் கீழ் புகார் அளித்தவருக்கு அனுப்பிட வேண்டும். அதன் நகலை இறுதி அறிக்கையோடு சேர்த்து சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நடுவர் அவர்களுக்கு அனுப்பிவிட வேண்டும்.

காவல் நிலை ஆணை எண்:661
நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படுகின்ற ஆய்வு அறிக்கைகள் காவல் வட்ட ஆய்வாளர் மூலமாகவே அனுப்ப வேண்டும். வேறு ஒரு காவல் அலுவலர் மூலம் விசாரணை செய்யப்பட்ட வழக்கின் முடிவு மீது  சந்தேகம் வந்தால், அந்த வழக்கை மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவிட காவல் வட்ட ஆய்வாளர் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. அல்லது அவரே அந்த வழக்கை  விசாரணை செய்யலாம்.

காவல் நிலை ஆணை எண்:662
விசாரணை செய்கின்ற வழக்கு திட்டமிட்ட பொய் வழக்கு என்று ஆய்வு அறிக்கையின் மூலம் காவல் வட்ட ஆய்வாளர் அவர்கள் முடிவு செய்தால், அந்த வழக்கைத் தொடுத்த மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்க எண்ணுகிறாரா? இல்லையா? என்பதை  அந்த அறிக்கையில் முடிவில் தெரிவிக்க வேண்டும். அப்படி முடிவெடுக்காவிட்டால், ஏன் நடவடிக்கை எடுக்க எண்ணவில்லை என்ற காரணங்களை தெரிவிக்க வேண்டும்.

காவல் நிலை ஆணை எண்:663
பொய்யான தகவல்களைக் கொடுத்து, புகார் அளித்த ஒருவர் மீது வழக்குத் தொடுப்பதுஇந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 182 மற்றும் பிரிவு 211 ன் கீழ் தண்டணைக்குரிய குற்றமாகும்இந்தப் பிரிவுகளின் கீழ் காவல் வட்ட ஆய்வாளர் அவர்கள் காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் அல்லது மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோரின் உத்தரவு இல்லாமல், பொய் புகார் அளித்த ஒருவர் மீது வழக்குத் தொடுக்கக் கூடாது.

காவல் நிலை ஆணை எண்:664
கொடுக்கப்பட்ட பணியில் செய்த குற்றங்களுக்காக, ஊரகப் பகுதியிலுள்ள  அரசுப் பணியாளர்களின் மீது  வழக்குத் தொடுப்பதாக இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும். சென்னை மாநகராக இருந்தால், அந்தத் துறைத் தலைவரிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். இத்தகைய அனுமதி கோருகின்ற   காவல்துறையினருக்கு பத்து நாட்களுக்குள் அவர்கள் பதிலை அனுப்பிவிட வேண்டும்.

காவல் நிலை ஆணை எண்:668
விசாரணை செய்கின்ற வழக்குகளை, பொய் வழக்கு என்று காவல்துறை ஆய்வாளர் அவர்களால் அறிக்கை செய்யப்பட்டிருந்து, அந்த அறிக்கையானது நடுவருக்கு மனநிறைவை கொடுக்காவிட்டால்,     குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 190 ன் கீழ், தானாகவே நடவடிக்கை எடுக்க நடுவருக்கு அதிகாரம் உண்டு.


Sunday, May 13, 2018

பல்வேறு பத்திரங்களிலும் பழைய ஆவணங்களிலும் காணப்படும் வார்த்தைகளை பற்றி சட்டம் தெளிவோம்...


வார்த்தைகளை முழு அர்த்தத்துடன் நாம தெரிந்து கொள்ளும் பொழுது ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் நிலங்கள் பற்றி புரிந்து கொள்ள முடியும். அவைகள் பற்றி காண்போம்.
1. ஊர் மானியம்ஊரின் பொது ஊழியத்திற்க்காக விடப்பட்ட வரியில்லா நிலம்
2. ஊரிக்கைஊரை சார்ந்த நிலம்
3. காவிதி புறம்அரசரை கவிதை பாடியதற்கு கொடுக்கப்பட்ட நிலம் ( வரிவிலக்கு)
4. சாந்து புறம்அரசருக்கு சந்தனம் கொடுத்து வருவதருக்கு விடப்பட்ட நிலம் (வரிவிலக்கு)
5. மடப்புறம்மடத்திற்காக விடப்பட்ட நிலம் ( வரி விலக்கு)
6. அடிசிற்புரம்உணவிற்காக விடப்பட்ட நிலம் ( வரி விலக்கு )
7. அறப்புறம்தரும செயலுக்கு வரி விலக்குடன் விட்ட இடம்.
8. இறையிலிவரி நீக்கப்பட்ட இடம்
9. கடவுளின் () – கோயில் விடப்பட்ட இறையிலி இடம்.கோயில் இடம்
10. சுவாஸ்தியம் () – பரம்பரையாக வரும் நிலம் சுவாதீயம்
11. பூர்வீக பாத்தியம்பரம்பரையாக வரும் நிலம்
12. அடுத்தூண்பிழைப்புக்கு விடப்பட்ட நிலம்
13. ஒரு போகுஒரே தன்மையுடைய நிலம்
14. இதைபுன்செய் சாகுபடி நிலம்
15. கூநிலம்
16. குறிஞ்சிமலையும் மலை சார்ந்த இடமும்
17. முல்லைகாடும் காடு சார்ந்த இடமும்
18. மருதம்வயலும் வயல் சார்ந்த இடமும்
19. நெய்தல்கடலும் கடல் சார்ந்த இடமும்
20. பாலைபாலை நிலம்
21. கடறுபாலை
22. தெரிபாலை
23. உவர் நிலம்உப்பு தன்மை நிலம்
24. சுரம்பாலை
25. தண்பனைமருதநிலம்
26. காணபாட்சிஉரிமை நிலம்
27. கரம்புசாகுபடி செய்யாத நிலம்
28. கரம்பைவறண்ட களிமண் நிலம்
29. களர்சேற்று நிலம்
30. கொல்லைமுல்லை நிலம்
31. சோலைமுல்லை நிலம்
32. கடுந்தரைஇறுகிய நிலம்
33. கொத்துக்காடுகொத்தி பயிரிடுவதற்குரிய நிலம்
34. விளை நிலம்விளையக்கூடிய இடம்
35. நன்செய் நிலம்நீர்
கிடைக்கக்கூடிய, பாசனம் உள்ள இடம்
36. தோட்டக்கால்கிணற்று பாசனம்
37. இறவைகிணற்று பாசனம்
38. நதி மாதுருகம்ஆற்று பாய்சல் நிலம்
39. நீராம்பம் நீர்பாசன வசதி உள்ள நிலம்
40. நீர் நிலம்நன்செய் நிலம்
41. திருத்துநன்செய் நிலம்
42. கழனி நிலம்நன்செய் நிலம்
43. காணிநன்செய் நிலம்
44. புன்செய் நிலம்மழையை நம்பும் பாசனம்
45. காடுபுன்செய் நிலம்
46. வானம் பார்த்த பூமிபுன்செய் நிலம்
47. செய்கால் கரம்புதரிசாக விடப்பட்ட நிலம்
48. தரிசுசாகு படி செய்யப்பாடமல் கிடக்கும் நிலம்
49. தரைபூமி
50. பூமிநிலம்
51. கீழ்மடைகிழக்கே இருக்கும் நீர் பாசன இடம்
52. மேல மடைமேற்கே இருக்கும் நீர் பாசன இடம்
53. கடை மடைஇறுதியாக நீர்பாயும் இடம்
54. தினைபுனம்தினை வகைகள் விளையும் நிலம்
55. திகர்மேட்டு நிலம்
56. உள்ளடி நிலம்ஏரியை அடுத்துள்ள நிலம்
57. ஆற்றுபகைநதிநீர் பாசனத்தால் உள்ள வண்டல் நிறைந்த நிலம்
58. கல்லாங்குத்து நிலம் – ( கற்கள் மிகுந்து காணப்படும் நிலம்)
59. வட்டகை நிலம்சுற்றிலும் வெளியிதப்பட்ட நிலம்
60. அசும்புவழுக்கு நிலம்
61. மேய்ச்சல் நிலம்கால்நடை மேயும் நிலம்
62. செம்பாட்டு நிலம்செம்மண் நிலம்
63. சேவலைசெம்மண் நிலம்
64. கரிசல்கருப்புமண் நிலம்
65. களிதரைகளிமண் நிலம்
66. நத்தம்கிராமத்தில் வீட்டுமனை
67. மேட்டு கழனிமேடான நன்செய்
68. பள்ளக்காடுபள்ளமான புன்செய்
69. பயிரிலிதரிசு நிலம்
70. பழந்தரைநீண்ட நாள் சாகுபடியில் இருந்து வளம் குன்றிய நிலம்
71. புழுதி காடுபுழுதியாக விடப்பட்ட புன்செய்
72. புண்புலம்தரிசு நிலம்
73. புன்னிலம்வறண்ட பயனற்ற நிலம்
74. மானாவரரிமழை நீரால் சாகுபடி
75. மாநிலம்
76. மென்பால்மருதநிலம்
77. வறுநிலம்பாழ்நிலம்
78. விடுநிலம்தரிசு நிலம்
79. மெல்லடி புலம்புநெய்தல் நிலம்
80. பார்கடினமான நிலம்
81. பற்றுகட்டுகுடியுரிமை நிலம்
82. பங்கு காடுகூட்டு பங்கு காடு
83. பாழ் நிலம்விளைச்சலுக்கு உதவாத நிலம்
84. புறவுமுல்லை நிலம்
85. புறணிமுல்லை நிலம்
86. விருந்திஒருவர் பிழைப்புக்கு மானிய நிலம்
87. விதைப்பாடுகுறிப்பிட்ட அளவு விதை விதைப்பதற்குரிய நிலம்
88. வித்துப்பாடுகுறிப்பிட்ட அளவு விதை விதைப்பதற்குரிய நிலம்
89. முதை புனம்நெடுங்காலம் பயன்பாட்டில் உள்ள நிலம்
90. மானியம்கோயில் நிர்வாகம் அறச்செயல்கள் போன்றவற்றிற்கு முற்காலத்தில்வழங்கப்பட்ட வரியில்லாத நிலம்
91. மனைவீடு கட்டுவதற்கான நிலம்
92. போடுகால்தரிசு நிலம்
93. பொது நிலம்பிரிக்கபடாத நிலம்
94. மஞ்சள் காணிசீதன நிலம்
95. பொன்காணிசீதன நிலம்
96. பூசாவிருத்திகோயிற் பூசைக்கு விடப்பட்ட மானியம்
97. புறம்போக்கு நிலம்சாகுபடிக்கு ஏற்றவை அல்ல () பொது பயன்பாட்டிற்கு விடப்பட்ட தீர்வை
விதிக்கப்படாத நிலம்.
98. புறம்இறையிலி நிலம்
99. புறவுஅரசனால் அளிக்கப்பட்ட மானிய நிலம்
100. பிரம்ப தேயம்பிராமணர்க்கு தரப்பட்ட மானிய நிலம்
101. பாதவக்காணிகோயில் பணியாளர்களுக்கு படியாக தரப்பட்ட நிலம்
102. படிபுறம்கோயில் அர்ச்சகருக்கு அளிக்கப்படும் மானிய நிலம்
103. வெட்டுகாடுதிருத்தியமைத்த காட்டு நிலம்
104. வேலிநிலம்
105. வெங்கள் மண்சூரிய வெப்பத்தால் சூடேறிய மண்
106.தர்காசி நிலம்தரிசு நிலம்
இது போன்று இன்னும் பல்வேறு வகையான நிலங்கள் உள்ளன.


இந்திய கல்விக் கொள்கை வரலாறு - மெக்காலே முதல் மோடி வரை! https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jul/24/history-of-i...